Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே 10) ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 6,535 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.45 பேர் உயிரிழந்தனர். 1,824 பேர் வீடுதிரும்பியுள்ளனர். தமிழகத்தில், சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு கணிசமாக இருந்த நிலையில், கோயம்பேடு மூலம் கொரோனா பரவுவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 404 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் சென்னைக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக திருவள்ளூர் மாறியுள்ளது.